தங்க சங்கிலி திருடிய பெண் கைது

நெல்லையில் தங்க சங்கிலி திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
நெல்லை தச்சநல்லூர் ஊருடையார்புரத்தை சேர்ந்தவர் நாராயணவடிவு (வயது 39). இவரின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பேச்சியம்மாள் (27). நாராயணவடிவு வீட்டில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர் கடந்த மாதம் திருடி சென்றார்.
இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பேச்சியம்மாள் தான் தங்க சங்கிலியை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேச்சியம்மாளை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





