கையை கத்தியால் அறுத்து பெண் தற்கொலை


கையை கத்தியால் அறுத்து பெண் தற்கொலை
x

விக்கிரமசிங்கபுரம் அருகே கையை கத்தியால் அறுத்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டி பாரதியார் தெருவை சார்ந்தவர் செந்தில் விநாயகம். இவர் விக்கிரமசிங்கபுத்தில் உள்ள தனியார் ஆலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கவிதா (வயது 45). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது, கவிதா தனது கையை கத்தியால் அறுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் நரம்பு துண்டிக்கப்பட்டதால் ரத்தம் வெளியேறி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த விக்கிரமசிங்கபுரம் ேபாலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்து போன கவிதாக்கு 2 மகன்கள் உள்ளனர்.


Next Story