விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 16 July 2023 12:15 AM IST (Updated: 16 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மணி (வயது 27) கொத்தனார். இவரது மனைவி முத்துலட்சுமி (21). இவர் விஷத்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். இதைபார்த்த மணி மற்றும் உறவினர்கள், முத்துலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், முத்துலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story