பெண் தீக்குளித்து தற்கொலை


பெண் தீக்குளித்து தற்கொலை
x

நெல்லையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையை சேர்ந்தவர் முத்துக்குமார். பெயிண்டர். இவருடைய மனைவி செல்லம்மாள் (வயது 36). இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செல்லம்மாள் சம்பவத்தன்று வீட்டில் தனது உடலில் திடீரென்று மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இதில் உடல் கருகி பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் செல்லம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story