பெண் தீக்குளித்து தற்கொலை


பெண் தீக்குளித்து தற்கொலை
x

பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் பவானி (வயது 48). இவரது கணவர் ரகு. சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பவானி கடந்த 3 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட பவானி நரசிம்ம சாமி கோவில் தெருவில் உள்ள தனது அண்ணன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டார்.

பவானியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவானி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story