அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட பெண் சாவு

பள்ளிபாளையத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட பெண் இறந்தார்.
நாமக்கல்
பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் அக்ரகாரம் தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் சீதாலட்சுமி (வயது 35). இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சீதாலட்சுமியின் கணவர் பூபதி மனைவியை பிரிந்து சென்று விட்டார். சீதாலட்சுமி கூலி வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவர் வயிற்று வலிக்கு மாத்திரை சாப்பிட்டு வந்தார். நேற்று முன்தினம் மாத்திரைகள் அதிகமாக சாப்பிட்டு விட்டு மயங்கி கிடந்துள்ளார். பின்னர் அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சீதாலட்சுமி நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து பள்ளிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், அன்பலத்தரசன், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






