கார் மோதி பெண் சாவு


கார் மோதி பெண் சாவு
x
தினத்தந்தி 17 Oct 2023 7:45 PM GMT (Updated: 17 Oct 2023 7:46 PM GMT)

தேவூர் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது கார் மோதி பெண் பரிதாபமாக இறந்தார். அவருடைய கணவர் படுகாயம் அடைந்தார்.

சேலம்

தேவூர்:-

தேவூர் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது கார் மோதி பெண் பரிதாபமாக இறந்தார். அவருடைய கணவர் படுகாயம் அடைந்தார்.

கணவன்- மனைவி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் எல்லமங்கலம் குசலம்பாறை பகுதியை சேர்ந்த சின்னசாமி (வயது 52). அவருடைய மனைவி புஷ்பா (48). இவர்கள் இருவரும் பவானியில் இருந்து சங்ககிரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

வளையகாரனூர் இடத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அடையாளம் தெரியாத கார் மோதியதாக தெரிகிறது. இதில் சின்னசாமி, புஷ்பா இருவரும் காயம் அடைந்தனர்.

பரிதாப சாவு

கணவன்- மனைவி இருவரும் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் புஷ்பா பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

சின்னசாமி ஈரோட்டில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து தேவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.


Related Tags :
Next Story