அரசு பஸ் மோதி பெண் சாவு


அரசு பஸ் மோதி பெண் சாவு
x
தினத்தந்தி 30 May 2023 12:15 AM IST (Updated: 30 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கமுதி அருகே அரசு பஸ் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.

ராமநாதபுரம்

கமுதி,

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கல்லுப்பட்டி புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் சிவபிரகாஷ். இவருடைய மனைவி சிலோர்மணி(வயது 50). இவர் தனது பேரன் சுமினுடன் இருசக்கர வாகனத்தில் கமுதியில் இருந்து கல்லுப்பட்டி நோக்கி சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பஸ்சின் பின்சக்கரத்தில் சிக்கிய சிலோர்மணி சம்பவ இடத்திேலயே துடிதுடித்து உயிரிழந்தார். சுமின் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினான். இது குறித்த புகாரின் பேரில் அரசு பஸ் டிரைவர் குன்னூரை சேர்ந்த மதுரை வீரன்(52) மீது கமுதி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story