மோட்டார்சைக்கிளிலிருந்து தவறி விழுந்து பெண் பலி


மோட்டார்சைக்கிளிலிருந்து தவறி விழுந்து பெண் பலி
x
தினத்தந்தி 3 Oct 2023 10:06 AM GMT (Updated: 3 Oct 2023 1:41 PM GMT)

ஆரணி அருகே மோடட்டார்சைக்கிளில் 'லிப்ட்' கேட்டு சென்ற பெண் தவறி விழுந்து பலியானார்.

திருவண்ணாமலை

ஆரணி அருகே மோடட்டார்சைக்கிளில் 'லிப்ட்' கேட்டு சென்ற பெண் தவறி விழுந்து பலியானார்.

ஆரணியை அடுத்த 12 புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தாள மூர்த்தி. விவசாயி. இவரது மனைவி ஜெயா (வயது 55), விவசாய நிலத்துக்கு செல்வதற்காக புறப்பட்டார். அப்போது அதே ஊரை சேர்ந்த மெக்கானிக் பாஸ்கர், மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அவரிடம் 'லிப்ட்' கேட்ட ஜெயா, மோட்டார்சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிள் ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கியபோது நிலை தடுமாறியதில் ஜெயா கீழே தவறி விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஜெயாவை அந்த பகுதியில் இருந்தவர்களுடன் மீட்ட பாஸ்கர் அவரை ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயா இறந்து விட்டார்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் மகன் ரேணு புகார் அளித்தார். அதன்பேரில் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story