சமையல் செய்யும் போது சேலையில் தீப்பிடித்து பெண் சாவு


சமையல் செய்யும் போது சேலையில் தீப்பிடித்து பெண் சாவு
x
தினத்தந்தி 4 Aug 2023 12:30 AM IST (Updated: 4 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சமையல் செய்யும் போது சேலையில் தீப்பிடித்து பெண் பரிதாபமாக இறந்தார்.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே உள்ள வள்ளியம்மாள்புரம் இந்திரா காலனி தெருவை சேர்ந்தவர் சுடலை. இவரது மனைவி நிர்மலா தேவி (வயது 34). இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அன்று நிர்மலா தேவி வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால், தடுமாறவே அவரது சேலையில் தீப்பற்றியது. வலி தாங்க முடியாமல் நிர்மலாதேவி அலறியபடி வீட்டில் இருந்து வெளியேறி சாலையில் வந்து விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நிர்மலா தேவி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story