மின்சாரம் தாக்கி பெண் சாவு


மின்சாரம் தாக்கி பெண் சாவு
x

ஆரணி அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியை அடுத்த அடையபலம் ஊராட்சிக்குட்பட்ட அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி இந்திரா (வயது 50). இவர்களுக்கு சீனிவாசன் என்ற மகனும், மாலதி என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் வீட்டின் அருகே உள்ள மின்கம்பத்தின் அருகில் மாடுகளை கட்டுவதற்காக இந்திரா சென்றார்.

அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து இந்திராவின் சகோதரர் மாரிமுத்து ஆரணி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தி ஆரணி தாசில்தாருக்கும், வருவாய் கோட்டாட்சியருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story