பாம்பு கடித்து பெண் சாவு

பாம்பு கடித்து பெண் பரிதாபமாக இறந்தார்.
குளித்தலை அருகே உள்ள பணிக்கம்பட்டி சந்தை பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி விஜயா (வயது 39). இவர் நேற்று முன்தினம் ஆட்டுக்கு புல் அறுப்பதற்காக பணிக்கம்பட்டியில் உள்ள ஒருவரது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கிடந்த பாம்பு ஒன்று விஜயாவை கடித்துள்ளது. இதையறிந்த விஜயாவின் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் விஜயா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





