ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்


ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
x

ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது.

பெரம்பலூர்

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கிழுமத்தூர் பூங்கா நகரை சேர்ந்தவர் செல்வம். இவர் சென்னையில் நாட்டு மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜலெட்சுமி(வயது 28). இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை என 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ராஜலெட்சுமி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலெட்சுமிக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் துங்கபுரத்தில் இருந்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜலெட்சுமியை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் குன்னம் பகுதியில் கோர்ட்டு அருகே சென்றபோது ராஜலெட்சுமிக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதையடுத்து ஆம்புலன்சை டிரைவர் ராஜா சாலையோரமாக நிறுத்தினார். மேலும் ராஜலெட்சுமிக்கு ஆம்புலன்சில் இருந்த மருத்துவ அவசர கால உதவியாளர் சந்திரசேகர் பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் 2 பேரும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


Next Story