சேலம் தளவாய்பட்டியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


சேலம் தளவாய்பட்டியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

சேலம் தளவாய்பட்டியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

இரும்பாலை:

தகராறு

சென்னை ஆவடி வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அப்பு. கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி பிரியங்கா (வயது 24). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி அபி என்ற 3 வயதில் பெண் குழந்தையும், 7 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் அப்புவிற்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் பிரியங்கா கணவரிடம் கோபித்து கொண்டு சேலம் தளவாய்பட்டி ஏரி காலனியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு நேற்று காலை வந்தார்.

தற்கொலை

எனினும் மன வேதனையில் இருந்த அவர் மதியம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த இரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story