மின்சாரம் பாய்ந்து பெண் பலி


மின்சாரம் பாய்ந்து பெண் பலி
x

நத்தம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் பலியானார்.

திண்டுக்கல்

நத்தம் அருகே உள்ள கல்வேலிபட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவருடைய மனைவி போதும்பொண்ணு (வயது 49). நேற்று இவர், துணியை துவைத்து விட்டு வீட்டருகே உள்ள கம்பியில் காயப்போட்டு கொண்டிருந்தார். அப்போது அதன் அருகே இருந்த மின்கம்பியில், அவரது கை பட்டு விட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே போதும்பொண்ணு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் போதும்பொண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story