இருசக்கர வாகனம் ஓட்டிய பெண்ணை கீழே தள்ளி 6 பவுன் சங்கிலி பறிப்பு


இருசக்கர வாகனம் ஓட்டிய பெண்ணை  கீழே தள்ளி 6 பவுன் சங்கிலி பறிப்பு
x

இருசக்கர வாகனம் ஓட்டிய அங்கன்வாடி பெண் ஊழியரை கீழே தள்ளி 6 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பிய 2 பேைர போலீசார் தேடிவருகிறார்கள்.

ராமநாதபுரம்

இருசக்கர வாகனம் ஓட்டிய அங்கன்வாடி பெண் ஊழியரை கீழே தள்ளி 6 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பிய 2 பேைர போலீசார் தேடிவருகிறார்கள்.

சங்கிலி பறிப்பு

ராமநாதபுரம் அருகே உள்ள நயினார்கோவில் பாப்பனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி ரமேஷ் குமாரி (வயது 40).

தற்போது ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் வசித்து வருகிறார்கள். அருகே உள்ள தேர்த்தங்கல் அங்கன்வாடி மையத்தில் ரமேஷ்குமாரி பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இவர் பணிக்குச் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். ஆர்.காவனூர் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் ரமேஷ் குமாரியை கீழே தள்ளி அவர் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர்.

2 பேருக்கு வலைவீச்சு

கீழே விழுந்ததில் ரமேஷ் குமாரி படுகாயம் அடைந்தார். இதை தொடர்ந்து சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிச்சென்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

ராமநாதபுரத்தில் பணி முடிந்து வீடு திரும்பிய பெண்ணிடம் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story