குடும்ப தகராறில் பெண் தீக்குளிப்பு காப்பாற்ற முயன்ற கணனும் காயம்


குடும்ப தகராறில் பெண் தீக்குளிப்பு காப்பாற்ற முயன்ற கணனும் காயம்
x

திருப்பத்தூரில் குடும்ப தகராறில் பெண் தீக்குளித்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவனும் காயமடைந்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் குடும்ப தகராறில் பெண் தீக்குளித்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவனும் காயமடைந்தார்.

குடும்ப தகராறு

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவருக்கு செந்தில்குமார் என்ற மகனும், நளினி, தீபா ஆகிய 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

மகேந்திரன், அவரது மனைவி சின்ன பாப்பா ஆகிய இருவரும் இறந்துவிட்டனர். திருப்பத்தூர் அடுத்த புத்தாகரம் ஊராட்சி பாரண்ட பள்ளியில் உள்ள நிலம் மற்றும் திருப்பத்தூர் சிவசக்தி நகர் பகுதியில் உள்ள வீடு ஆகியவை மகேந்திரன் பெயரிலேயே இருப்பதால் அவருடைய மகன் செந்தில்குமார், மகள் நளினி ஆகியோருக்கு இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் செந்தில்குமாரின் மனைவி சரண்யாவுக்கும், நளினிக்கும் இடையே இரண்டு நாட்களுக்கு முன்பு சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

தீக்குளிப்பு

இது குறித்து சரண்யா கணவர் செந்தில்குமாரிடம் கூறி, அவருடைய தங்கை நளினியை கண்டிக்குமாறு கூறியிருக்கிறார். இதில் கணவன்- மனைவி இடயே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சல் அடைந்த சரண்யா வீட்டில் இருந்த பெட்ரோளை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில்குமார் மனைவியை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக இருவரையும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் சரண்யா அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டார். இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேஜிஸ்திரேட் செல்வம் மருத்துவமனைக்கு சென்று வாக்குமூலம் பெற்றார்.


Next Story