பாலக்கோடு அருகேமதுபாட்டில்கள் விற்ற பெண் கைது


பாலக்கோடு அருகேமதுபாட்டில்கள் விற்ற பெண் கைது
x
தர்மபுரி

பாலக்கோடு

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து நேற்று மாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தளவாய்அள்ளி புதூரில் வீட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்ற சாந்தா (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story