அரசு பஸ்சை சிறைப்பிடித்து பெண்கள் திடீர் போராட்டம்


அரசு பஸ்சை சிறைப்பிடித்து பெண்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 24 Sep 2022 6:45 PM GMT (Updated: 24 Sep 2022 6:45 PM GMT)

திண்டிவனம் அருகே அரசு பஸ்சை சிறைப்பிடித்து பெண்கள் திடீர் போராட்டம்

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம் அடுத்த ஆட்சிபாக்கம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென ஆவணிப்பூரில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்த பஸ்சை மறித்து சிறை பிடித்தனர்.

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணியானது சரியான முறையில் வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்த அவர்கள் தங்களுக்கு முறையாக பணி வழங்க வேண்டும் என்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுபற்றிய தகவல் அறிந்து வந்த ஊராட்சி மன்ற தலைவர் பொன்னப்பன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர். பின்னர் அந்த அரசு பஸ் அங்கிருந்து திண்டிவனம் புறப்பட்டு சென்றது.


Next Story