காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்


காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்
x

மதுரையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை

மதுரையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

மதுரை மாநகராட்சியின் 50-வது வார்டு பகுதியான, சிம்மக்கல், காமாட்சிபுரம் அக்ரகாரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த 10 நாட்களாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. குடிநீர் பிரச்சினை தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதை கண்டித்தும், குடிநீர் வினியோகத்தை சரி செய்ய வலியுறுத்தியும் மதுரை மாவட்ட நூலகம் எதிரே உள்ள சிம்மக்கல் சந்திப்பு சாலையில் காலி குடங்களுடன் பெண்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச்சினை சரி செய்யப்படும் என உறுதி கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.


Related Tags :
Next Story