'போக்சோ'வில் தொழிலாளி கைது


போக்சோவில் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 10 Jan 2023 6:45 PM GMT)

சாணார்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திண்டுக்கல்

சாணார்பட்டி அருகேயுள்ள செடிபட்டியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 57). விவசாய கூலித்தொழிலாளி. இவர் 1-ம் வகுப்பு படிக்கும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் ெகாடுத்தார். அதன்பேரில் 'போக்சோ' சட்டத்தின்கீழ் இன்ஸ்பெக்டர் விக்டோரியா வழக்குப்பதிவு செய்து தங்கவேலை கைது செய்தார்.


Next Story