தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x

கருங்கல் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

கருங்கல்:

கருங்கல் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கருங்கல் அருகே மாங்கரை கம்பிளார் கோட்டவிளையை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (வயது 52), தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மது போதையில் வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டார். இதை குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த ஸ்டீபன்ராஜ் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்டீபன் ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story