நாகர்கோவிலில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


நாகர்கோவிலில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 18 Sep 2022 6:45 PM GMT (Updated: 18 Sep 2022 6:45 PM GMT)

நாகர்கோவிலில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில் கோட்டார் கலைநகர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் (வயது 57), தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஜோசப் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்தாக தெரிகிறது. இதனை உறவினர்கள் கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த ஜோசப் வீட்டில் உள்ள ஒரு அறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைகண்ட உறவினர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜோசப் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்போில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story