கோட்டப்பட்டி அருகே தொழிலாளி தற்கொலை


கோட்டப்பட்டி அருகே தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 14 Jan 2023 12:15 AM IST (Updated: 14 Jan 2023 4:17 PM IST)
t-max-icont-min-icon

கோட்டப்பட்டி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி

அரூர்:

கோட்டப்பட்டி அருகே உள்ள சிக்களூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 60), தொழிலாளி. இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தங்கவேல் இறந்தார். தொழிலாளி தற்கொலை தொடர்பாக கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story