விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 2 March 2023 12:15 AM IST (Updated: 2 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

புதுக்கடை, மார்ச்.2-

புதுக்கடை அருகே உள்ள வேங்கோடு மேலே குருவி விளையை சேர்ந்தவர் சின்னப்பர் (வயது 62), தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக சின்னப்பர் மனமுடைந்த நிலையில் இருந்ததாகவும், காரணம் கேட்டால் பதில் கூறாமல் சோகத்துடன் இருந்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற அவர், பக்கத்தில் உள்ள ஒரு கல்லறை தோட்டத்தில் விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதைகண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவருடைய மகன் சுபாஷ்(26) புதுக்கடை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜேசு ராஜசேகரன் விரைந்து சென்று சின்னப்பரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

--

1 More update

Next Story