விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 28 July 2023 6:45 PM GMT (Updated: 28 July 2023 6:46 PM GMT)

போடியில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

போடி வெண்ணிமலை தெருவை சேர்ந்தவர் முகமது ஆரிப் (வயது 39). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நிஷா (39). கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. அப்போது நிஷா தனது கணவரை கண்டித்தார். இதனால் மனமுடைந்த முகமது ஆரிப் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட நிஷா அவரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story