விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 16 Dec 2022 6:45 PM GMT (Updated: 16 Dec 2022 6:45 PM GMT)

மனைவி, குழந்தை இறந்த துக்கம் தாங்காமல் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

வருசநாடு அருகே உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கருப்பசாமி என்ற பிரசாந்த் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தங்கம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். அதில் 2-வது மகன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்தான். தங்கம்மாள் 3 மாதங்களுக்கு முன்பு நெஞ்சுவலி ஏற்பட்டு திடீரென்று இறந்தார். மனைவி, குழந்தை இறந்த துக்கம் தாங்காமல் மனமுடைந்த பிரசாந்த் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 12-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது மதுவில் விஷம் கலந்து குடித்து பிரசாந்த் மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பிரசாந்த் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி, குழந்தை இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.


Next Story