விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 6 Jun 2023 6:45 PM GMT (Updated: 6 Jun 2023 6:46 PM GMT)

மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர்

நீடாமங்கலம்:

மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூலித்தொழிலாளி

நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி வடக்குத்தெருவில் வசித்து வந்தவர் ராஜா (வயது 40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கவிதா. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜா வீட்டின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்காமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து நீடாமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதையடுத்து நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, ராஜா வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து இறந்து கிடந்தது தெரியவந்தது.

விஷம் குடித்து தற்கொலை

இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராஜாவிற்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது.

இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இதனால் 6 மாதத்திற்கு முன்பு அவரது மனைவி கவிதா கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த ராஜா வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


Next Story