கடலூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை



கடலூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லிக்குப்பம்,
கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு ஒதியடிக்குப்பத்தை சேர்ந்தவர் ராசு (வயது 60). தொழிலாளி. சம்பவத்தன்று இவர், வீட்டில் விஷத்தை குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். இதைபார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராசு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராசு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire