தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x

கருங்கல் அருகேதொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கன்னியாகுமரி

கருங்கல்,

கருங்கல் அருகே உள்ள மங்கலகுன்று பிச்சிவிளையை சேர்ந்தவர் நெல்சன் (வயது56), தொழிலாளி. இவர் நோயால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால், மனமுடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு நெல்சன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி டயானா (53) கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story