தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

பாப்பாக்குடி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
முக்கூடல்:
பாப்பாக்குடி அருகே உள்ள பள்ளக்கால் பொதுக்குடியைச் சேர்ந்த பூதத்தான் என்பவருடைய மகன் முத்துமாலை (வயது 29). கூலி தொழிலாளி. இவருக்கு பிரியா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இந்தநிலையில் கடந்த 17-ந் தேதி விஷம் குடித்தார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு முத்துமாலை இறந்தார். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





