பெண்ணாடம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


பெண்ணாடம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 20 Jan 2023 6:45 PM GMT (Updated: 21 Jan 2023 8:58 AM GMT)

பெண்ணாடம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

பெண்ணாடம்,

பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலத்தை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 50). இவருடைய மனைவி கன்னியராசி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். தனசேகரன், கடந்த சில ஆண்டுகளாக துபாயில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் உடல்நலம் சரியாகவில்லை என தெரிகிறது. மேலும் மருத்துவமனைக்கு செல்ல போதிய பணமும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தனசேகரன், வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தனசேகரன் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story