நெசவுத்தொழிலாளி தீக்குளித்து தற்கொலை


நெசவுத்தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
x

ஆரணி அருகே நெசவுத்தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியை அடுத்த மருசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 40), நெசவுத்தொழிலாளி.

இவரின் மனைவி செல்வி. சதீஷ்குமார் தினமும் மதுபானம் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து போதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

கடந்த 12-ந்தேதி இரவு மதுபானம் குடித்து விட்டு வந்து வழக்கம்போல் மனைவியிடம் தகராறு செய்தார்.

திடீரென வீட்டின் உள்ளே சென்ற சதீஷ்குமார் மண்எண்ணெய்யை எடுத்து வந்து உடலில் ஊற்றினார். அப்போது அவர், நான் செத்தாலும் நீ (மனைவி) நன்றாக இரு, எனக்கூறி உடலில் தீ வைத்துக் கொண்டார்.

எாியும் தீயில் வலியை தாங்க முடியாமல் சதீஷ்குமார் கூச்சலிட்டு அலறினார். அங்கிருந்தவர்கள் ஓடி வந்து தீைய அணைத்து, சதீஷ்குமாைர உயிருடன் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி இன்று சதீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

தற்கொலை செய்து ெகாண்ட சதீஷ்குமாருக்கு கன்னிகாஸ்ரீ என்ற மகள் உள்ளார்.


Next Story