மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

பேச்சிப்பாறை அருகே மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

பேச்சிப்பாறை அருகே மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொழிலாளி

பேச்சிப்பாறை அருகே உள்ள பள்ளிமுக்கு டி.பி. ரோட்டை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 40), கூலி தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த மகேஷ்வரி (40) என்பவரும் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகள் உள்ளார்.

இதற்கிடையே புஷ்பராஜ் மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மது குடிக்கும் பழக்கத்தை கைவிடச்சொல்லி புஷ்பராஜிடம் மனைவி மகேஸ்வரி கூறியுள்ளார். ஆனால் அவர் மது குடிக்கும் பழக்கத்தை கைவிடவில்லை.

தற்கொலை

இதனால் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மகேஷ்வரி தனது மகளுடன் கணவரை பிரிந்து தனது தாய் வீட்டிற்குச் சென்று விட்டார். இதன் காரணமாக புஷ்பராஜ் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜுக்கு அவரது தம்பி ஜெஸ்டின்ராஜ் உணவு கொண்டு சென்றுள்ளார். அப்போது புஷ்பராஜ் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பேச்சிப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story