தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

பேரணாம்பட்டு அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வேலூர்

பேரணாம்பட்டு அருகே உள்ள எம்.வி.குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30), கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியங்கா (25). இவர்களுக்கு ரித்திகாஸ்ரீ (7) என்ற மகளும், மித்ரன் (4) என்ற மகனும், 11 மாத பெண் குழந்தையும் உள்ளனர். மணிகண்டன் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மகளிர் குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் மனைவி பிரியங்காவுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டுள்ளார். அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது.

இது குறித்து மேல்பட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சபாரத்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story