கிணற்றில் தொழிலாளி பிணம்


கிணற்றில் தொழிலாளி பிணம்
x

கிணற்றில் தொழிலாளி இறந்து கிடந்தார்

தென்காசி

திருவேங்கடம்:

மதுரையை சேர்ந்தவர் நிறைபாண்டி மகன் மணிகண்டன் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அடுத்துள்ள கலிங்கப்பட்டி கீழதுறையை சேர்ந்த முத்துராக்கு என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று மாலை 5 மணி அளவில் கலிங்கப்பட்டிக்கு தென்புறமுள்ள இந்திரா காலனி அருகே ஒரு கிணற்றில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில் தீயணைப்பு வீரர்கள் சென்று அவர் உடலை மீட்டனர். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தாரா? அல்லது கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். மணிகண்டனின் உடலை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story