பஸ் மோதி கூலித்தொழிலாளி சாவு


பஸ் மோதி கூலித்தொழிலாளி சாவு
x

பள்ளிபாளையத்தில் பஸ் மோதி கூலித்தொழிலாளி இறந்தார்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் அடுத்த அண்ணா நகர் பில்லமட காடு பகுதியை சேர்ந்தவர் வேட்டியப்பன் (வயது 73). கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு அண்ணாநகர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையம் வழியாக நாமக்கல் நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிமாக வேட்டியப்பன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இவரது மனைவி லட்சுமி பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வேட்டியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விபத்தை ஏற்படுத்தி அரசு பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story