குடிபோதையில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த தொழிலாளி சாவு


குடிபோதையில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த தொழிலாளி சாவு
x

சந்தவாசல் அருகே குடிபோதையில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

சந்தவாசல் அருகே உள்ள கேளூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 55), தொழிலாளி. இவர் கடந்த 8-ந் தேதி மது அருந்திவிட்டு குடிபோதையில் தள்ளாடியபடி வீட்டிற்கு வந்தார்.

அப்போது திடீரென அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரது மனைவி தேன்மொழி, அவரது மகன் சஞ்சீவ்காந்தி ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தேன்மொழி சந்தவாசல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story