கூரை வீட்டின் மேல் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

விழுப்புரம் அருகே கூரை வீட்டின் மேல் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம்
விழுப்புரம் அருகே புருஷானூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 55). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனது கூரை வீட்டின் மேல் தார்பாலின் போட்டுக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி ராஜேந்திரன் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





