ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி


ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 13 Aug 2023 6:45 PM GMT (Updated: 13 Aug 2023 6:46 PM GMT)

அருமனை அருகே ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

கன்னியாகுமரி

அருமனை,

அருமனை அருகே உள்ள சிதறால் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது50). கூலி தொழிலாளி. இவருக்கு சிதறாலில் ஆற்றையொட்டி நிலம் உள்ளது. நேற்று மாலையில் செல்வகுமார் தனது மனைவி, மகனுடன் அந்த நிலத்துக்கு சென்றார். அங்கு வேலை செய்துவிட்டு மனைவியும், மகனும் வீட்டுக்கு வந்தனர்.

செல்வகுமார் நிலத்தின் அருகே உள்ள ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில் அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story