வேன் மோதி தொழிலாளி பலி

கோவையில் வேன் மோதி தொழிலாளி பலியானார்.
கோவை ஒத்தகால்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 32). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று பொள்ளச்சி-கோவை ரோட்டில் மயிலேரிபாளையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த மினிவேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆறுமுகம் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





