மொபட் மீது லாரி மோதி பேக்கரி தொழிலாளி பலி


மொபட் மீது லாரி மோதி பேக்கரி தொழிலாளி பலி
x

பரமத்திவேலூர் அருகே மொபட் மீது லாரி மோதி பேக்கரி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பேக்கரி தொழிலாளி

பரமத்தி வேலூர் அருகே உள்ள உழவர்பட்டியை சேர்ந்தவர் மணி (வயது 55). இவர் பரமத்திவேலூர், நல்லியாம்பாளையத்தில் உள்ள ஒரு பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை வேலைக்கு செல்ல பரமத்திவேலூர் தாலுகா அலுவலகம் அருகே படமுடிபாளையம் பகுதியில் தனது மொபட்டில் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது கரூரில் இருந்து சேலத்திற்கு பிளைவுட் ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராதவிதமாக சாலையை கடக்க முயன்ற மணி மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு தலை மற்றும் கால்களில் காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பலி

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மணி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்திவேலூர் போலீசார் மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி மீது மோதி விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story