தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x

களக்காடு அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள மூங்கிலடி- சிவனாப்பேரி ரோட்டை சேர்ந்தவர் செல்லையா மகன் குமரன் (வயது 43). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சீதாதேவி (40). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் குமரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், சீதாதேவி கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த குமரன் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று அவர் இறந்தார். இதுபற்றி களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story