உலக மக்கள் தொகை தினம்


உலக மக்கள் தொகை தினம்
x

சிவகிரி பள்ளியில் உலக மக்கள் தொகை தின நிகழ்ச்சி நடந்தது.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி சேனைத் தலைவர் மேல்நிலைப்பள்ளியில் உலக மக்கள் தொகை தினம் நடந்தது. இதையொட்டி மாணவர்களுக்கு பேச்சு போட்டி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு சிவகிரி நகரப்பஞ்சாயத்து தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு, பள்ளியின் செயலர் தங்கேஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர். வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சக்திவேலு வரவேற்றார்.

பேச்சு போட்டியில் ராயகிரி சி.பா.ஆதித்தனார் பள்ளி மாணவி அபிரஞ்சனி முதல் இடத்தையும், சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி மாணவி சத்யபிரியா 2-வது இடத்தையும், சி.பா.ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி மாணவி தர்ஷினி 3-வது இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் ரவிக்குமார், ராஜாராம், செவிலியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் சண்முகவேலு நன்றி கூறினார்.


Next Story