திருஞானசம்பந்தர் குருபூஜை வழிபாடு


திருஞானசம்பந்தர் குருபூஜை வழிபாடு
x

தா.பழூரில் திருஞானசம்பந்தர் குருபூஜை வழிபாடு நடைபெற்றது.

அரியலூர்

தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் விசாலாட்சி அம்மன் உடனுறை விசுவநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் மூல நட்சத்திரம் அன்று திருஞானசம்பந்தர் குருபூஜை வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு திருஞானசம்பந்தர் குருபூஜையையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதையடுத்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருஞானசம்பந்தர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் ஞானசம்பந்தர் அருளிய தேவார பதிகங்களை பாடி திருமுறை பெட்டகம் கோவில் பிரகாரத்தில் பிரதட்சணம் செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு பதிகங்கள் பாடி வழிபாடு நடைபெற்ற பின் மகாதீபாராதனை நடைபெற்றது. குருபூஜையையொட்டி ராஜவீதிகளில் திருஞானசம்பந்தர் வீதி உலா திருக்காட்சி நடைபெற்றது. வீதி உலாவின் போது சிவனடியார்கள் திருமுறைகளுள் திருஞானசம்பந்தர் அருளிய பதிகங்களை பாடி வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

1 More update

Next Story