மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி யாக பூஜை


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி யாக பூஜை
x

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி யாக பூஜை நடந்தது.

செங்கல்பட்டு

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் அடுத்த மாதம் 5-ந்தேதி மாலை 5 மணி அளவில் உலக நன்மைக்காகவும், மழை வளம் வேண்டியும், இயற்கை வளம் பெருகவும், வைரஸ் போன்ற நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட்டு நலமுடனும், வளமுடனும் வாழ வேண்டி பங்காரு அடிகளார் 1008 யாக குண்டங்கள் அமைத்து கலச விளக்கு வேள்வி பூஜையை நடத்தி வைக்கிறார்.

இதையொட்டி முக்கோணம், சதுரம், சாய் சதுரம், ஐங்கோணம், அறு கோணம், எண் கோணம், வட்டம், சூலம் வடிவங்களை உள்ளடக்கிய யாக குண்டங்கள் அமைப்பதற்காக ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கடந்த புதன்கிழமை குருபூஜை நடைபெற்றது. தொடர்ந்து 1008 யாக குண்டங்கள் அமைக்கும் பணியில் ஆயிரக்கணக்கான செவ்வாடை தொண்டர்கள் பங்கேற்றனர்.

இதையொட்டி யாகபூஜை நேற்று நடந்தது. சித்ரா பவுர்ணமி வேள்வி பூஜையானது வருகிற 4-ந்தேதி காலை 3 மணி அளவில் மங்கல இசையுடன் தொடங்கி ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இதனை தொடர்ந்து பங்காரு அடிகளாருக்கு தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்ட மன்றங்களின் பொறுப்பாளர்கள் பாத பூஜை செய்து வரவேற்பு அளிக்க உள்ளனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத்தலைவர்கள் செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ் மற்றும் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், வாசன், ஜெயராமன் ஆகியோர் செய்து வருகின்றனர்.


Next Story