பசுபதீஸ்வரர் கோவிலில் வருடாபிஷேகம்


பசுபதீஸ்வரர் கோவிலில் வருடாபிஷேகம்
x

பசுபதீஸ்வரர் கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே காரைக்குறிச்சி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சவுந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 3 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், வருடாபிஷேக விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு தமிழ்வேத முறைப்படி சிறப்பு வேள்வி பூஜைகள் நடைபெற்றன. சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாட்டினை விழாக்குழுவினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.


Next Story