உளுந்தூர்பேட்டை அருகே திருமணமான 9 மாதத்தில் இளம்பெண் தற்கொலை


உளுந்தூர்பேட்டை அருகே        திருமணமான 9 மாதத்தில் இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 24 Oct 2023 6:45 PM GMT (Updated: 24 Oct 2023 6:46 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே திருமணமான 9 மாதத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எ.கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனு. லாரி டிரைவரான இவருக்கும், பானு(வயது 19) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சீனு வேலைக்காக வௌியூர் சென்று விட்டார். வீட்டில் இருந்த பானு சம்பவத்தன்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பானு இறந்து விட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பானு வரதட்சனை கொடுமை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தற்கொலை செய்து கொண்ட பானுவுக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் போலீசார் திருக்கோவிலூர் கோட்டாட்சியரின் மேல்விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.


Next Story