இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லை டவுனில் இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை டவுன் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரின் மனைவி லட்சுமி (வயது 25). இவர்களுக்கு திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் ஆகின்றன. 4 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று லட்சுமி செல்போனில் அதிகநேரம் பேசிக்கொண்டு இருந்ததை அவரின் தாய் கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த லட்சுமி, தனது வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணம் முடிந்து 5 ஆண்டுகளே ஆவதால் நெல்லை உதவி கலெக்டர் விசாரணை நடத்த உள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





