பட்டிவீரன்பட்டி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது


பட்டிவீரன்பட்டி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

பட்டிவீரன்பட்டி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டி அருகே வத்தலக்குண்டு சாலையில் உள்ள அ.பிரிவு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு ரோந்து சென்றனர்.

அப்போது அங்குள்ள தனியார் மண்டபம் அருகில் வத்தலக்குண்டுவை சேர்ந்த மணிகண்டன் (வயது 29) என்பவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.



Next Story